Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 15 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, தனது நாட்டு நீதிமன்றத்தின் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனால், ஊழல் விசாரணைகளில் அவர் சிக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னாபிரிக்க உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, இன்னும் 30 நாட்களுக்குள், ஊழல் தொடர்பான நீதித்துறை விசாரணையை, ஜனாதிபதி ஆரம்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் ஊழலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும், அரச வழக்குத் தொடுநர், ஊழல் தொடர்பாக விசாரணை செய்வதற்கான நீதித்துறை விசாரணையொன்றை அமைந்ததோடு, அதற்கான நீதிபதியொருவர், பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டார்.
எனினும், இவ்விரு விடயங்களையும் செய்வதற்கு, அரச வழக்குத் தொடுநருக்கும் பிரதம நீதியரசருக்கும் அதிகாரம் கிடையாது எனவும், நீதி விசாரணையை, தானே முன்னெடுக்க முடியுமெனவும், ஜனாதிபதி ஸுமா, வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அவரது மனுவை நிராகரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதியின் நீதிமன்ற நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்ததோடு, நீதிச் செயற்பாட்டைத் துஷ்பிரயோகம் செய்வது ஆகும் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவுக்குக் கிடைத்துள்ள, நீதித்துறையின் இக்குட்டு, ஒரு வாரகாலத்துக்குள் அவருக்குக் கிடைக்கின்ற இரண்டாவது பின்னடைவாகும். ஏற்கெனவே, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு, அரச வழக்குத் தொடுநர் ஒருவர் நியமிக்கப்படுவதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த வழக்கும் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024