2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நைஜீரியாவில் இஸ்லாமியவாதிகளின் தாக்குதலில் 30 படைவீரர்கள் பலி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 15 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடகிழக்கு நைஜீரியாவில், கடந்த புதன்கிழமை முதலான தொடர் தாக்குதல்களிலொன்றில், ஏறத்தாழ 30 அரசாங்கப் படைவீரர்களை, இஸ்லாமிய ஆயுததாரிகள் கொன்றதாக, இராணுவ, சிவில் ஆயுதக்குழு தகவல்மூலங்கள் நேற்றுத் தெரிவித்துள்ளன.

நான்கு தாக்குதல்களில், குறைந்தது 27 படைவீரர்களும், பிரிவுத் தலைவரொருவர் உள்ளடங்கலாக சிவில் இணைந்த செயலணியின் 10 உறுப்பினர்களும் உயிரிழந்ததாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மொன்குனோவில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு, தமது அமக் செய்தி முகவரகமூடாக, ஐ.எஸ் மேற்கு ஆபிரிக்க மாகாணம், நேற்று முன்தினம் உரிமை கோரியுள்ளது. 33 படைவீரர்களைக் கொன்றதாகவும், ஒருவரைக் கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .