2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்களாதேஷ் படகு விபத்தில் 26 பேர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சரக்குக் கப்பலொன்றுடன் மோதிய ஏறத்தாழ 50 பயணிகளைக் கொண்டிருந்த பங்களாதேஷ் படகொன்று, பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு தெற்காகவுள்ள ஷிடலக்‌ஷியா ஆற்றில் நேற்று மூழ்கியதையடுத்து குறைந்தது 26 பேர் இறந்ததாகவும், சிலரை இன்னும் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டாக்காவிலிருந்து 20 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தொழிற்துறை நாரயன்கஞ் மாவட்டத்திலிருந்து முன்ஷிகஞ்ச்சுக்கு புறப்பட்ட உடனேயே படகு மூழ்கியதாக நாரயன்கஞ் மாவட நிர்வாகி முஸ்டைன் பில்லாஹ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சில பயணிகளால் கரைக்கு நீந்த முடிந்ததாக பொலிஸ், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்துவரும் கொவிட்-19-ஐக் கட்டுப்படுத்துவதற்காக இன்றிலிருந்தான தேசிய ரீதியிலான ஒரு வார முடக்கத்தை அரசாங்கம் அறிவித்த நிலையில், நகரத்தை விட்டு வெளியேறுபவர்களால் படகு நிறைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .