2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாடசாலை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக உயர்வு

Shanmugan Murugavel   / 2021 மே 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள பாடசாலை ஒன்றுக்கு வெளியேயான குண்டு வெடிப்பு ஒன்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 58ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த குறைந்த 150 பேருக்கு மருத்துவக் கண்காணிப்பை வழங்குவதற்கு வைத்தியர்கள் தடுமாறி வருகின்றனர்.

நேற்று மாலையில் இடம்பெற்ற குறித்த குண்டு வெடிப்பானது, காபூலின் ஷியா முஸ்லிம் புறநகர்ப் பகுதியான டஷ்ட்-ஈ-பர்ஷியை அதிரச் செய்திருந்தது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில், கற்கைகளை முடித்தமையைடுத்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஏழு அல்லது எட்டு பாடசாலைச் சிறுமிகளும் உள்ளடங்குவதாக சம்பவத்தைக் கண்ணுற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தாக்குதலுக்கு தலிபான்களை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி சாடியிருந்தபோதும், தாங்கள் பங்கெடுத்தமையை தலிபான் பேச்சாளரொருவர் மறுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .