2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பதவி விலகினார் தென்னாபிரிக்காவின் ஸூமா

Editorial   / 2018 பெப்ரவரி 15 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலக வேண்டுமென, அவரது கட்சியிடமிருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தத்துக்கு அடிபணிந்தே, அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அவரது கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், பதவி விலக வேண்டுமென்பதற்கான பணிப்புரையை, ஏற்கெனவே விடுத்திருந்தது. ஆரம்பத்தில் அதை ஏற்று நடக்க மறுத்த அவர், தற்போது பதவி விலகியுள்ளார்.

9 ஆண்டுகளாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அடுத்தாண்டு நடுப்பகுதியிலேயே பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது. எனினும், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பொதுமக்களின் ஆதரவை இவர் இழந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .