2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரிட்டனில் 50 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே செய்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் இராஜினாமா செய்ததால் விரக்தியடைந்த தெரசா மே தனது பிரதமர் பதவியை 24-7-2019 அன்று இராஜினாமா செய்தார்.

அதன்பின்னர் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால் எரிச்சலடைந்த அவர், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார். 

நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு  நாடாளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி ஒப்புதல் அளித்தது. டிசெம்பர் 12ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை உள்ளூர் நேரப்படி 7 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள 650 நாடாராளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். அநேகமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவுகள் தெரிந்துவிடும். 

முடிவுகள் அனைத்தும் வெளியானபின்னர், வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும்.

இந்த தேர்தலில் கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் பிரதானமான கட்சிகளான கன்சர்வேடிவ், லேபர் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. 

பிரச்சார காலத்தின் வெளியான கருத்துகணிப்புகளில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியே தொழிற் கட்சியைவிட கிட்டத்தட்ட 10 புள்ளிகள் அதிகமாக பொதுமக்கள் ஆதரவைப் பெற்று முன்னிலை வகித்ததாக தெரியவந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் வெளியான கருத்துக்கணிப்பில், போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தொங்கு நாடாளுமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொதுத்தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .