2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிலிப்பைன்ஸில் சுயாட்சிக்கான வாக்கெடுப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதித் தீவான மின்டானாவோவில் நேற்று (21) இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்காக, மகுய்ன்டானோவா பகுதியில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் இருவர், தங்களது பெயர்களை வாக்குப் பட்டியலில் தேடுவதைப் படத்தில் காணலாம்.

நான்கு தசாப்தகாலமாக இப்பகுதியில் இடம்பெற்று வந்த ஆயுத முரண்பாட்டின் காரணமாக, சுமார் 150,000 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவ்வன்முறைகளை நிறுத்துவதற்கான சமாதான முயற்சிகளின் உச்சக்கட்டமாகவே, அப்பகுதிக்குச் சுயாட்சி வழங்குவதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.

இவ்வாக்கெடுப்பில், மின்டானாவோவில் “பங்க்சமொரோ” என்ற பெயரில், சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சுயாட்சிப் பிரதேசத்தை உருவாக்க ஆதரவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .