2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புழுதிப் புயலில் சிக்கி 74 பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 மே 03 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் வீசிய புழுதி புயலில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு வீசிய இந்தப் புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, வீடுகள் மற்றும் கட்டடங்களும் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரவு வேளையில் வீசிய இந்தப் புயலில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 நான்கு இலட்சம் ரூபாய் (இந்திய ரூபாய்) நட்டஈடு வழங்கப்படுமென இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X