2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மக்காவுக்கு யாத்திரிகர் செல்வதில் மட்டுப்பாடு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19-க்கெதிரான தடுப்புமருந்தேற்றப்பட்டவர்கள் மாத்திரமே, புனித மாதம் ரமழானிலிருந்டு ஆரம்பிக்கும் உம்ராஹ் புனிதப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்களென சவுதி அரேபிய அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.

தடுப்புமருந்தேற்றப்பட்டவர்களுக்கு மாத்திரமே உம்ராஹ் கடமையை நிறைவேற்ற, புனித நகரான மக்காவிலுள்ள பெரிய பள்ளியில் பிரார்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படுமென அறிக்கையொன்றில், ஹஜ் மற்றும் உம்ராஹ் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில், கொவிட்-19 தடுப்புமருந்தை இரண்டு தடவைகள் பெற்றவர்களும், யாத்திரைக்கு குறைந்தது 14 நாள்களுக்கு முன்னர் முதலாவது தடுப்புமருந்தைப் பெற்றவர்கள் அல்லது கொவிட்-19-இலிருந்து குணமடைந்த தனிநபர்கள் உள்ளடங்குவதாக இவ்வமைச்ச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .