2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் ரஸாக் கைதானார்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் முன்னாள் ஜனாதிபதி நஜீப் ரஸாக், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று (19) கைதுசெய்யப்பட்டார். நாட்டின் அரச பணம், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் காணப்பட்டது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மலேஷியாவின் அபிவிருத்தி நிதியத்தின் பல பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான பணம், மோசடி செய்யப்பட்டது எனக் குற்றஞ்சாட்டப்படுவதுடன், அப்பணத்தில் 628 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள், முன்னாள் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் காணப்பட்டன எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X