2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணவரைக் கொன்று 42 பேரைக் கடத்திய துப்பாக்கிதாரிகள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மத்திய நைஜீரிய மாநிலமான நைகரில் உள்ள விடுதிப் பாடசாலை ஒன்றின் மீதான தாக்குதல் ஒன்றில், அடையாளங் காணப்படாத துப்பாக்கிதாரிகள் நேற்று மாணவர் ஒருவரைக் கொன்றதுடன், 27 மாணவர்கள் உள்ளடங்கலாக 42 பேரைக் கடத்தியுள்ளதாக மாநில ஆளுநர் அபுபக்கர் சனி பெலோ தெரிவித்துள்ளார்.

ககரா மாவட்டத்திலுள்ள அரசாங்க விஞ்ஞான இடைநிலைப் பாடசாலைக்குள், பாடசாலையின் பாதுகாப்பை மீறி அதிகாலை இரண்டு மணிக்கு தாக்குதலாளிகள் நுழைந்ததாகவும், 27 மாணவர்கள், மூன்று மணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் 12 உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகவும், ஒரு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்தியாளர் மாநாட்டொன்றில் பெலோ குறிப்பிட்டுள்ளார்.

கடத்தல்காரர்கள் இராணுவச்சீருடையை அணிந்திருந்ததாகவும், பாடசாலைக்குள் நுழைந்தவுடன் சுட்டதாக ஆசிரியரொருவரான அலியு இஸா உள்ளூர் செய்திச் சேவைகளுக்குத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .