2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மியான்மார் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்ட 7 வயதுச் சிறுமி

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 24 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரிலுள்ள பாதுகாப்பு படைகளால், ஏழு வயதான சிறுமியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டலே நகரத்திலுள்ள அவரது வீட்டிலேயே குறித்த சிறுமி கொல்லப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொல்லப்பட்டோரில் 20க்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளடங்குவதாக, மனித உரிமைகள் குழுவான சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் 164 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவிக்கின்ற நிலையில், குறைந்தது 261 பேர் உயிரிழந்துள்ளதாக, செயற்பாட்டாளர்கள் குழுவான, அரசியல் கைதிகளுக்கான உதவும் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .