2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மியான்மார் பார்சல் குண்டு வெடிப்பில் ஐவர் பலி

Shanmugan Murugavel   / 2021 மே 04 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மாரில், குறைந்தது ஒரு பார்சல் குண்டிலிருந்தான வெடிப்புகளில், பதவி நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவர், இராணுவ ஆட்சியை எதிர்க்கும் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த மூன்று பொலிஸார் உள்ளடங்கலாக ஐவர் கொல்லப்பட்டதாக, ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தென் மத்திய பகுதி மியான்மாரிலுள்ள மேற்கு பகோவிலேயே குறித்த வெடிப்புகள் நேற்று மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, அங்குள்ளரொருவரை மேற்கோள்காட்டி மியான்மார் நெள செய்தித் தொகுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வெடிப்பால் தனது ஆயுதங்கள் வெடித்ததையடுத்து சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த இன்னொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்ததாகவும், அங்குள்ளவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .