2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘றொக்கெட் தாக்குதலில் ஒப்பந்தகாரர் பலி; ஐ. அமெரிக்க வீரர் காயம்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குர்திஷ் வட ஈராக்கிலுள்ள ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தளமொன்றின் மீதான நேற்றைய றொக்கெட் தாக்குதலொன்றில், சிவில் ஒப்பந்தக்காரரொருவர் கொல்லப்பட்டதுடன், ஐ. அமெரிக்க படைவீரரொருவர் உள்ளடங்கலாக ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாக, ஈராக்கிலுள்ள ஐ. அமெரிக்க கூட்டணி தெரிவித்துள்ளது.

குர்திஷ் பிராந்தியத் தலைநகரான இர்பிலிலுள்ள கூட்டணிப் படைகளைத் தாக்குதல் தாக்கியதாக கூட்டணிப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இர்பில் சர்வதேச விமானநிலையத்துக்கருகே குறைந்தது மூன்று றொக்கெட்டுகள் தரையிறங்கியதாக குர்திஷ் பாதுகாப்புத் தகவல்மூலங்கள் தெரிவித்துள்ளன. அந்தவகையில், பாரிய வெடிப்புச் சத்தங்கள் சிலவற்றை றொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கேட்டதுடன், விமானநிலயத்துக்கருகே தீப்பற்றியதையும் கண்டுபிடித்துள்ளனர்.

சிவில் விமானநிலையத்துடன் இணைந்ததாக இராணுவத் தளமொன்றை ஐ. அமெரிக்க படைகள் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை இலக்கு வைத்ததாக சரயா அவ்லியா அல்-டாம் குழு, ஐ. அமெரிக்க தலைமையிலான தளம் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .