Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 23 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் பங்களாதேஷிலுள்ள றோகிஞ்சா அகதி முகாமொன்றில் பாரிய தீ நேற்று பரவியதையடுத்து, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்ததுடன், சிலர் கொல்லப்பட்டதாக, அதிகாரிகளும், சம்பவத்தை கண்ணுற்றவர்களும் தெரிவித்துள்ளனர்.
கொக்ஸ் பஸாரிலுள்ள பலுகலி முகாமினூடாக தீ பரவிய நிலையில், கூடாரங்கள் எரிந்த நிலையில், தமது உடமைகளை மீட்க மக்கள் தடுமாறியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திலுள்ள தீயணைப்புப் படையினர், மீட்பு அணிகள், தன்னார்வலர்கள், தீயைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முயல்வதாக, கொக்ஸ் பஸாரிலுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் பேச்சாளர் லூஸி டெனோவன் கூறியுள்ளார்.
இதேவேளை, பல வீடுகள் எரிந்துள்ளதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாக, முகாம்களிலுள்ள றோகிஞ்ச்சா அகதிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 Apr 2024
17 Apr 2024