2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வீட்டுவேலைகளுக்காக மனைவிக்கு பணம் செலுத்தவும்: நீதிமன்றம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் பங்ஷன் மாவட்ட நீதிமன்றமானது, மனைவியொருவர் அவரது திருமண காலத்தில் செய்த வீட்டுவேலைகளுக்காக இழப்பீட்டை வழங்குமாறு நபரொருவருக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், ஐந்தாண்டுளாக ஊதியம் பெறாமல் வேலை செய்ததற்காக 7,700 ஐக்கிய அமெரிக்க டொலர்களை குறித்த பெண் பெறவுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்த பின்னர் கடந்தாண்டு தனது மனைவியிலிருந்து விவகாரத்து பெறுவதற்கு குறித்த நபர் கடந்தாண்டு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், முதலில் விவகாரத்துக்கு மறுத்த குறித்த பெண், பின்னர் கணவர் எந்தவொரு வீட்டுவேலையையோ, குழந்தைப் பராமரிப்பு பொறுப்புகளைப் பொறுப்பேற்கவில்லை என நிதி இழப்பீட்டைக் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .