2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வேகப்படகுகளில் போதைப்பொருள் கடத்தல்: 100 பேர் கைது

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 03 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொராக்கோவிலிருந்து ஸ்பெய்னுக்கு சக்தி வாய்ந்த வேகப்படகுகளில் ஹஷிஷ், கஞ்சாவைக் கொண்டு சென்ற குழுவொன்றின் 100 உறுப்பினர்களைத் தாம் கைது செய்துள்ளதாக, ஸ்பானியப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

படகுகளில் போதைப்பொருள்களை நிரப்பிய குறித்த குழு, மத்தியதரைக் கடலினூடாக, தென் ஸ்பெய்னிலுள்ள செவில்லேக்கருகிலுள்ள குவாடல்குய்விர் ஆற்றை அடைந்துள்ளது.

இந்நிலையில், தொடர்ச்சியான தேடுதல்களில், ஐந்து தொன்களுக்கும் அதிகமான ஹஷீஷையும், 230 கிலோ கிராம் கஞ்சாவையும் பொலிஸ் கைப்பற்றியதாக அறிக்கையொன்றில், சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .