2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வைத்தியசாலையிலிருந்து சிறுவர்கள் விடுவிப்பு

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்திலுள்ள குகையொன்றுக்குள் சிக்கிக் கொண்ட பின்னர், பலத்த போராட்டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரும், வைத்தியசாலையிலிருந்து நேற்று (18) விடுவிக்கப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக, குகைக்குள் அடைபட்டிருந்த நிலையில், நோய்த் தொற்று ஏற்படக்கூடும் என்ற அபாயத்தில், கடந்த சில நாட்களாக, வைத்தியசாலையிலேயே இவர்கள் காணப்பட்டிருந்தனர்.

இன்றைய தினமே, அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு நாள் முன்னதாகவே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களும் பயிற்றுநரும், இப்போது நலமாக உள்ள போதிலும், அவர்களுக்கு மன அழுத்தம் வராமல் இருப்பதற்காக, தொடர்ச்சியான காலத்துக்கு அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர்.

மூன்று நாட்களாகத் தொடர்ந்து இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையின் போதே, அவர்கள் மீட்கப்பட்டிருந்தனர். ஆனால், மீட்பு நடவடிக்கைக்கு முன்னராக, அவர்களுக்கான ஒக்ஸிஜன் சிலின்டர்களை வழங்குவதற்காகக் குகைக்குள் சென்ற முன்னாள் கடற்படை வீரரொருவர் உயிரிழந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X