2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் தாக்குதல் தொடர் ஆரம்பமாகின்றது

குணசேகரன் சுரேன்   / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் இணைந்து, வடக்கு, கிழக்குப் பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தாக்குதல் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரை இரண்டாவது ஆண்டாக நடத்தவுள்ளது.

இத்தொடரின் போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை வரையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை தொடரில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 10 அணிகள், மட்டக்களப்பு மாவட்ட ஐந்து அணிகள், கிளிநொச்சி மாவட்ட மூன்று அணிகள், மன்னார், திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொரு அணி என மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன.

அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, முதற்சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும். அரையிறுதி, இறுதிப் போட்டிகள், சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X