2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனாகியது மகாஜனா

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூலை 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கால்ப்பந்தாட்ட பயிற்றுநர் அமரர் ரி. பத்மநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத் தொடரில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி சம்பியனாகியது.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி நிதியம், விளையாட்டு நிதியம், பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து யாழ். மாவட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்திய இக்கால்பந்தாட்டத் தொடர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரியையும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், தேவரையாளி இந்துக் கல்லூரியையும் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தன.

மகாஜனாக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தன. தொடர்ந்து நடைபெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில், மகாஜனாக் கல்லூரி அணி, 4-2 என்ற ரீதியில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

குறித்த போட்டியின் நாயகனாக மகாஜனாக் கல்லூரியின் ஜக்சன் தெரிவானார்.

இத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், தேவரையாளி இந்துக் கல்லூரியை வென்று யாழ். மத்திய கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X