2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது யாழ்ப்பாணம் இளைஞர் கழகம்

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 27 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாவட்ட இளைஞர் கழக அணிகளுக்கிடையில் நடைபெற்று வந்த கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், யாழ்ப்பாணம் இளைஞர் கழகம் சம்பியனாகியது.   

யாழ். மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 29ஆவது மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள், கடந்த ஒரு மாத காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்தது. இந்த விளையாட்டு நிகழ்வின் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.  

இதில், யாழ்ப்பாண பிரதேச இளைஞர் அணியை எதிர்த்து உடுவில் பிரதேச இளைஞர் அணி மோதியது. போட்டி தொடங்கியது முதல், யாழ்ப்பாண அணி ஆதிக்கம் செலுத்தியது. அதன்பயனாக, 16ஆவது நிமிடத்தில் யாழ்ப்பாண அணி, முதலாவது கோலைப் பெற்றது. முதற் பாதி, அந்தக் கோலுடன் முடிவடைந்தது.  

இரண்டாவது பாதியின் ஆறாவது நிமிடத்தில், உடுவில் அணி பதில் கோலைப் பெற்றது. அதே உத்வேகத்துடன் ஆடிய உடுவில் அணி, 14 ஆவது நிமிடத்தில் அடுத்த கோலைப் பெற்று, யாழ்ப்பாண அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.   

எனினும், சுதாகரித்து விளையாடிய யாழ்ப்பாண அணி, 30 ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று போட்டியைச் சமநிலைப்படுத்தியது. போட்டிநேர முடிவில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றன.   

வெற்றியாளரைத் தீர்மானிக்க, சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. அதில், யாழ்ப்பாண அணி, 4-3 என்ற ரீதியில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .