2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சம்பியனானது கொக்குவில் இந்துக் கல்லூரி

குணசேகரன் சுரேன்   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைப் பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவு பி அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.

இலங்கைப் பாடசாலைகள் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், கண்டி கேற்வே கல்லூரியை வென்றே, கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியனானது.

கந்தானை டி மசினோட் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பத்தில், கொக்குவில் இந்துவின் ஆதிக்கம் மேலோங்கியிருக்க, முதற்காற் பகுதியில் கொக்குவில் இந்து 18 - 4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது காற்பகுதியிலிருந்து, கேற்வே அணி கடுமையாகப் போராடிப் புள்ளிகளைச் சேர்த்த போதிலும், முதற்காற்பகுதியின் வித்தியாசத்தை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சளைக்காது விளையாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி, இரண்டாவது காற்பாதி முடிவில் 32-20 என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்றாவது காற்பகுதி முடிவில் 43-33 என்ற புள்ளிகள் கணக்கிலும் முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்த, நான்காவதும் இறுதியுமான காற்பகுதி முடிவடைகையில், 53-48 என்ற புள்ளிகள் கணக்கில் கொக்குவில் இந்து வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் சிறந்த பெறுமதிமிக்க வீராங்கனையாக, கொக்குவில் இந்துவின் கமலதாஸ் தமிழரசி தெரிவானதுடன், தொடரின் சிறந்த வீராங்கனையாக பி. பானு தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .