2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது தெல்லிப்பணை யூனியன் கல்லூரி

Editorial   / 2018 ஜூன் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

வட மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 20 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான எறிபந்தாட்டத் தொடரில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சம்பியனாகியது. 

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான இந்த எறிபந்தாட்டத் தொடரின் போட்டிகள் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. 

இதில், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை எதிர்த்து துணுக்காய் கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அணி மோதியிருந்த நிலையில், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, 25-17, 2624 என்றவாறு நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.

 மேற்படி தொடரில் மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி பெற்றது. 

பெண்களுக்கான இறுதிப் போட்டியில், தெல்லிப்பளை யூனியன் கல்லூரியை எதிர்த்து இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம் மோதிய நிலையில், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, 25-14, 25-21 என்றவாறு நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.

 இத்தொடரிலும் மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரிபெற்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .