2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசிய அணிக்கு புத்தளம் லீக்கிலிருந்து நான்கு வீரர்கள்

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஜூன் 16 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


சவூதி அரேபியாவில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஏ.எப்.சி. கால்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கும் தேசிய அணிக்கு, புத்தளம் கால்பந்தாட்ட லீக் சார்பாக, முதல் கட்டமாக நான்கு வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.  

தேசிய அணிக்காக, வீரர்களைத் தெரிவு செய்யும் முதலாவது கட்ட தெரிவுகளுக்கான பயிற்சி முகாம், கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில்,நேற்று (15) காலை நடைபெற்றது.  

புத்தளம் லீக் சார்பாக, இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்த வீரர்களில், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணி வீரர்களான, புத்தளம் லிவர்பூல் அணியைப் பிரநிதித்துவப்படுத்தும் எம். முசக்கீர், எம். ஹுஸைர் ஆகியோரும் நியூ ஃபிரண்ட்ஸ் அணியைப் பிரநிதித்துவப்படுத்தும் ஜே.எம். ஜஹீரும், ஒடிடாஸ் அணியைப் பிரநிதித்துவப்படுத்தும் எம். ஹயாமும் தெரிவாகியுள்ளனர்.  

புத்தளம் லீக் வீரர்களை, அதன் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத் அழைத்துச் சென்றிருந்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .