2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதலிடம் பெற்றது மன்னார் வலயம்

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூலை 11 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணப் பாடசாலைகளின் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான 11 ஆவது தடகளப் போட்டிகளில் மன்னார் வலயம் முதலிடம் பெற்றது.

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில் 733 புள்ளிகளைப் பெற்று மன்னார் வலயம் முதலிடத்தைப் பெற்றது.

634 புள்ளிகளைப் பெற்ற வலிகாமம் வலயம் இரண்டாமிடத்தையும் 529 புள்ளிகளைப் பெற்ற யாழ்.  வலயம் மூன்றாமிடத்தையும் பெற்றன. 262 புள்ளிகளைப் பெற்று கிளிநொச்சி வலயம் நான்காமிடத்தையும் ல் 258 புள்ளிகளைப் பெற்ற வடமராட்சி வலயம் ஐந்தாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

தொடர்ந்து வந்த இடங்களை, வவுனியா தெற்கு (245), முல்லைத்தீவு (222), தென்மராட்சி (127), துணுக்காய் (87), மடு (81), தீவகம் (60), வவுனியா வடக்கு (11) பெற்றுக் கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .