2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரி இராஜினாமா

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குப் பொறுப்பான மருத்துவ அதிகாரியான டாக்டர் மதன் தனது பதவியை இன்று புதன்கிழமை இராஜிநாமா செய்துள்ளார்.

நிருவாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாகவே இவர் தனது பொறுப்பாளர் பதவியை இராஜிநாமா செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக கடமைபுரிந்த இவர் வெளிநோயாளர் பிரிவில் டாக்டர்கள் பார்வையிடப்படும் நோயாளர்களின் தொகையை அதிகரித்ததுடன், வெளிநோயளர் பிரிவில் இரவு பகலாக கடமையாற்றிவந்தார்.

முன்னாள் வைத்திய அத்தியட்சகர் விடுமுறையில் செல்லும் வேளை மற்றும் ஏனைய அவசரமான வேளைகளில் பதில் வைத்திய அத்தியட்சகராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மாற்றப்பட்டதையடுத்து இவ்வைத்தியசாலையில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திங்கட்கிழமை ஜந்து வைத்தியர்கள் விடுமுறை பெற்று வெளியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .