2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

யாழ் தென்மராட்சியில் குழந்தையொன்று மின்னல் தாக்கி உயிரிழப்பு

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் தென்மராட்சி பகுதியில் மின்னல் தாக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ் தென்மராட்சி மட்டுவில் கிழக்கு பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயதுடைய சாந்தகுமார் அபிநயா என்ற குழந்தையே  இவ்வாறு மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த குறித்த குழந்தையின் தாயார் யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் குறித்த குழந்தையின் தாயார்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X