Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
S. Shivany / 2021 ஜனவரி 17 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். சாஜஹான்
நீர்கொழும்பு பல்நோக்கு கூட்டுறவு சங்க பிரதான நிலையத்தில் பணியாற்றும் 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் சோலங்க தெரிவித்தார்.
முன்னதாக 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது, 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் அங்கு பணியாற்றும் 140 பேருக்கு ஐந்து தினங்களுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் மொத்தமாக 38 பேருக்கு தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
நீர்கொழும்பு பொதுச் சுகாதாரப் பிரிவில் இதுவரை 472 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago