2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

12 பேர் பலி; 69 பேர் காயம், 140 சாரதிகள் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவருட தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 12 பேர் உயிரிழந்ததோடு, 69 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றர்.

சனிக்கிழமை மாலை 6 மணிமுதல், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான 12 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 22 பேர் படுகாயமடைந்ததோடு, 47 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

17 விபத்துகளினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தக்காலப்பகுதியில் குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 140 சாரதிகள் கைது செய்யப்பட்டதோடு, 166 சாரதிகள் மீது வாகனத்தை வேகமாக செலுத்தியமை தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, விதிகளை மீறி வாகனத்தை செலுத்திய 22 சாரதிகள் தொடர்பிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .