2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

16 அணி 3ஆக பிளந்தது?

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அர​சாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரைக் கொண்ட அணி, மூன்று பிரிவுகளாகப் பிளவடைந்துள்ளதென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்த 16 பே​ர் அணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள், ஏதேனும் ஒரு கட்சியுடன் இணைய வேண்டுமென்று விரும்புகின்றனர்.   அதன் பிரகாரம், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென, 16 அணியின் பெரும்பாலானவர்கள் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

எவ்வாறாயினும், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையாது, சுயேட்சையாகச் செயற்பட வேண்டுமென்றே, முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, முன்னாள் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதிச் சபாநாயகர் திலங்க சுமத்திபால, மேற்கண்டவர்களை விட மாற்று எண்ணங்களைக் கொண்டுள்ள​னரெனத் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலைமை காரணமாக, அரசாங்கத்திலிருந்து விலகிய 16 அணியினரால், ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரத்தின் மனசாட்சி எனும் கூட்டத்தொடரும், இடைநடுவே நின்றுபோயுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .