2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘19 ஆல் நாடு பிளவடையலாம்’

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி

19ஆவது திருத்தத்தில் பாரிய நெருக்கடிகள் காணப்படுவதால், நாட்டின் ஆட்சி பிளவடைய இடமுண்டெனத் தெரிவித்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்  செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவை ஆட்சி பீடமேற்றி, ஐக்கிய தேசியக் கட்சி அவரை ஏமாற்றமடையச் செய்துள்ளதெனத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்தரிக் கட்சி தலைமையகத்தில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஏகாதிப்பத்தியத்தை ஒழிக்க வேண்டுமென,  19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், இதன் மூலம்  நாடு அராஜக பாதையில்  பயணிக்க இடமுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .