2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

20 வர்த்தக நிலைய ஊழியர்களுக்குக் கொரோனா

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரின் பிரதான வீதிகளில் உள்ள வர்த்தக நிலையத்தின் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில், 13 பேருக்கு நேற்று (27) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று வரையில் அங்குள்ள 20 வர்த்தக நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் குருநாகல் மலியதேவ வீதி, முஸ்லிம்
பள்ளிவாசல் வீதி, திம்புள்ள வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களிலேயே கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் மேற்குறித்த வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, பயணக்காட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .