2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

200 பொலிஸாரின் இடமாற்றம் இரத்து

Editorial   / 2019 ஜனவரி 19 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கில் பணியாற்றும் 200 பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில், இரண்டு வருடங்கள் பணியாற்றி பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது எனினும், தாங்கள் வடக்கில் பணிபுரியவே விரும்புவதாக, இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர். முதலில் 135 பேரும் இரண்டாவது தடவையாக 40 பேரும் இடமாற்றத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர். இதுதவிர மேலும் 56 உத்தியோகத்தர்கள் வடக்கில் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது 230 உத்தியோகத்தர்களின் இடமாற்றம் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுப்படி இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .