2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேலும் 293 பேருக்கு கொவிட்-19 தொற்று

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இன்று 293 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 291 பேர் முன்னர் அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் என்பதோடு, இருவர் தற்போது தனிமைப்படுத்தல் மய்யங்களில் உள்ளவர்கள்.

அந்தவகையில், மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் 5,232 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, தற்போது வரையில் 8,706 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தரவுகளின்படி 4,043 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளதுடன், 4,646 பேர் மருத்துவ சிகிச்சைகளை வைத்தியசாலைகளில் பெறுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .