2024 மார்ச் 28, வியாழக்கிழமை

3 STF முகாம்கள் மூடப்பட்டன

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவல, பேலிய​கொட, வெதமுல்ல  ஆகிய STF முகாம்களிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,   குறித்த மூன்று STF முகாம்களும் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த முகாம்களில் சமைப்பதற்காக பேலிய​கொடையில் இருந்து மீன் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதன்மூலமே கொரோனா தொற்று முகாம்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிரிஹான மற்றும் நாரஹேன்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 3 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X