2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

3 மாத சிசு மற்றும் 3 வயது சிறுவன் பலி

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபும் – மஹவிலச்சி பிரதேசத்தில் மூன்று மாத சிசுவொன்று கால்வாயில் விழுந்து நேற்று (21) உயிரிழந்துள்ளது.

வீட்டின் முன்னால் காணப்படும் கால்வாய் ஒன்றிலேயே சிசு விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாங்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி மூன்று வயது சிறுவனொருவன் நேற்று (21) உயிரிழந்துள்ளான்.

வீட்டில் இருக்கும் பொழுதே, மின்சாரம் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிறுவனை உடனடியாக மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது, எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X