2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

30 ஆயிரம் மெ.டொன் அரிசி இறக்குமதி

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு அரிசித் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டு, விரைவில் 30 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சதொச தலைவர் ரி.எம்.கே.பீ.தென்னக்கோன் தெரிவித்தார். 

இது தொடர்பில், வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   

உள்நாட்டு அரிசியின் விலையையும் விட இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அரச, தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   

எவ்வாறாயினும், லங்கா சதொச விற்பனை நிலையங்களில் அரிசியின் விலை தனியார் நிறுவனங்களின் விலை மட்டத்தையும் விட, குறைந்த அளவில் காணப்படுகின்றன. மேலும், சதொச விற்பனை நிலையங்களில் 75 ரூபாய்க்கும் 85 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலை மட்டங்களில் அரிசி விற்பனை செய்யப்படுகின்றன.   

சதொச நிறுவனத்துக்கு மேலதிகமாக, தனியார் துறைக்கும் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில தனியார் வர்த்தகர்கள் அரிசியின் விலையைக் அதிகரித்துள்ளனர்.   

5 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசி, உள்நாட்டு அரிசியாகும். இறக்குமதி செய்யப்படும் அரிசியின் தரம் உயர்ந்த மட்டத்தில் உள்ள போதிலும் மக்கள் அவற்றை மிகவும் குறைவாகவே பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

இதேவேளை, நாளாந்தம் 6,500 மெற்றிக் டொன் அரிசி தேவைப்படுவதாக, அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .