2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

300 ​​அடி பள்ளத்தில் விழுந்த வான் : இருவர் படுகாயம்

Editorial   / 2018 ஜூன் 24 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து அக்கரபத்தனை நோக்கி பயணித்து கொண்டிருந்த வான் ஒன்று, அக்கரபத்தனை பிரதான வீதியிலிருந்து, 300 அடி  பள்ளத்தில் வீழ்ந்ததில், வான் சாரதி உட்பட அதில் பயணித்த ஒருவரும், படுகாயங்களுடன் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை 1.00 மணியளவில் அக்கரபத்தனை பிரதான வீதியில், நாகசேன பிரதேசத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வானின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ளமையாலேயே, விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .