2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘5 லீற்ற​ர் இரத்தம் வெளியேறியிருந்தது’

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
“துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமசந்திரவின் உடலிலிருந்து ஐந்து லீற்றருக்கும் அதிகமான இரத்தம் வெளியேறியிருந்தமையாலேயே அவர் இறந்துள்ளார்” என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  

அந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,   
“சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், யாழ்.போதன வைத்தியசாலைக்கு மாலை 5.25 மணியளவில் கொண்டு வரப்பட்டார். அப்போது அவருக்கு அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக சத்திர சிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.  

“அதன்போது அவரது வயிற்றுபகுதியில் இருந்து பெருமளவான இரத்தம் வெளியேறி இருந்தது. சுமார் 5 லீற்றர் இரத்தம் அவருடைய உடலிலிருந்து வெளியேறி இருந்தது.  

“உடனடியாக அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டது. 09 பயின்ட் இரத்தம் ஏற்றப்பட்டு அவருடைய உயிரைக் காப்பாற்ற, சத்திர சிகிச்சை நிபுணர்கள் மூன்று மணி நேரம் போராடினார்கள் அவருக்கு ஈரல், குடல் பகுதி மற்றும் கீழ் பெரும் நாளங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தன, கீழ் பெரு நாளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அதிகளவில் இரத்த பெருக்கு ஏற்பட்டுள்ளது.   

“சத்திர சிகிச்சையின் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு வைத்து மூன்று மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பயனின்றி, இன்று (நேற்று) அதிகாலை 12:20 க்கு உயிரிழந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .