2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘6 மாதங்களுக்கு ஷொப்பிங் உள்ளது’

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

லன்ஞ்ச் ஷீற் மற்றும் ஷொப்பிங் பைகளுக்கு, செப்டெம்பர் 1ஆம் திகதி முதல், அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள ​போதிலும், ஆறு மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளன” என்று, பொலித்தீன் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   

அதற்கு மேலதிகமாக, இன்னும் சில மாதங்களுக்குத் தேவையான லன்ஞ்ச் ஷீற் மற்றும் ஷொப்பிங் பைகள் களஞ்சியப்படுத்தப்பட்டு உள்ளன என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.   

இந்தத் தடை அறிவிப்பானது, 6 வாரங்களுக்கு முன்னதாக விடுக்கப்பட்ட போதிலும், மாற்று முறைமைகள் மற்றும் திட்டங்கள் என்னவென்பது தொடர்பில் கைத்தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் அறிவுறுத்தப்படவில்லை என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.   

எனினும், தடைவிதிப்பை ஆறு மாதங்களுக்கு கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.   

நாளொன்றுக்கு 15 மில்லியன் லன்ஞ்ச் ஷீற்களும், 20 மில்லியன் ஷொப்பிங் பைகளும் தேவைப்படுகின்றன, என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X