2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

6 வயது சிறுவன் துஷ்பிரயோகம்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

6 வயது சிறுவனை,துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும், 40 வயதுடைய நபர் ஒருவரை பள்ளம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பள்ளம-நாகவில, பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் திருமணமாகாதவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனை பாடசாலைக்கு அழைத்துச் சென்றும், பாடசாலை நிறைவடைந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்தும் இவ்வாறு தினமும் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கடந்த 23 ஆம் திகதி பாடசாலையிலிருந்து சிறுவனை வீட்டுக்கு அழைத்துவந்து குறித்த நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்கபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X