2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

62,338 இலங்கையர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

62338 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளனரென, குடிவரவு- குடியகல்வு திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு தடைவிதிக்கப்பட்டவர்களுள் பாதுகப்பு பிரிவுகளைச் சேர்ந்த 30,000 இற்கு அதிகமானோர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதிமன்றங்கள் மற்றும் இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கமைய, குறித்த 62338 பேரும் தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தடைப்பட்டியலில் அரசியல்வாதிகள், போதை வர்த்தகர்கள், புலம்பெயர்ந்தோர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அடங்குகின்றனர்.

இந்த தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பதற்காக, அரச புலனாய்வு பிரிவு, விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X