2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

8 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

Amirthapriya   / 2018 மே 20 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடரும் மழையுடனான வானிலையின் காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, காலி, குருநாகல் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் ​அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது மண்​​மேடு சரிந்து விழுந்ததில், வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. குறித்த வீட்டில் மூவர் இருந்துள்ளதோடு, மூவரும் உயிர் தப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொல்பிட்டிய தொடக்கம் அத்துருகிரிய  வரையானப் பகுதியில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு காரணமாக, துல்ஹிரிய, ரம்புக்கன மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X