2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

95 கிலோகிராம் ​ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில்

Editorial   / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

1080 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் இம்மாதம் 29ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கோட்டை நீதவான் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

பொலிஸ் விசேடப் படையணி மற்றும் போதை ஒழிப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து 95 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையர் இருவரும் வெளிநாட்டவர்கள் மூவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .