2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம்  கடும் சுகாதாரப் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைபை பெற்று பொதுமக்கள் இந்த தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து கண்டறியுமாறு ஆளுநர் மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவாகும் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த பிரதேசத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு கல்முனை பிரதேசத்தில் இதுவரையில் 86 நோயாளர்கள் பதிவாகி இருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாஹரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் வாழும் எந்தவொரு நபரும் தமது வீடுகளில் இருந்து வெளியேறக்கூடாது என்று ஆளுநர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பிரதேசத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவைகள் மூலம் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .