2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அங்கொட லொக்காவின் சகா சிக்கினார்

Editorial   / 2019 மார்ச் 12 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கொட லொக்காவின் சகாவான பாதாள குழுவைச் சேர்ந்த ஒருவர், 9 மி.மீற்றர் ரக கைத்துப்பாக்கியுடன், கொட்டிகாவத்தை-கல்கொட்டுவ வீதியில் வைத்து, இன்று (12) காலை, மிரிஹான குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தகவலையடுத்து, சந்​தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார்,  வாழைத்தோப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்து, பின்னர் சட்டவிரோதமானமுறையில் அதிலிருந்து நீங்கி பின்னர் பாதாள குழுவில் இணைந்துள்ளமை, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக, கப்பம் கோரியமை மற்றும் துப்பாக்கியை காண்பித்து மரண அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபரை, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X