2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிபர் பவானிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Amirthapriya   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மீண்டும் கல்வியமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (18) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் அதனை தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய ​அதிபர் ஆர்.பவானியை முழந்தாலிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண முதலமைச்சர்  சாமர சம்பத் தஸநாயக்கவுக்கு பதவி பறிக்கப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்டமை தொடர்பிலேயே அந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .