2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிவேக வீதியில் இயந்திரக்கோளாறுக்கு உள்ளாகும் வாகனங்கள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் இயந்திரக்கோளாறுக்கு உள்ளாவதால், பாரிய பிரச்சினை ஏற்படுவதாக, அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதியில் பயணித்த வாகனங்களுள் 70 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயந்திரக் ​கோளாறு ஏற்பட்டு, வீதியின் பல இடங்களிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்களை அகற்றுவதற்கு, அதிவேக வீதி பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவற்றை வீதிகளில் நுழைப்பது பாரிய பிரச்சனையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .