Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியான நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி திறக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று (07) இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்குபற்றுதலுடனும் விசேட செயலணியின் கூட்டம் இடம்பெற்றது.
சகல ஆயர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும் திறக்கப்பட வேண்டும், சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது நடமாடும் சேவையை முன்னெடுக்கவும் அனுமதியளித்தல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொத்தமல்லி, இஞ்சி மற்றும் வெனிவெல்கட்டையை இறக்குமதி செய்தல். ஆயூர்வேத சிகிச்சையை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை அஞ்சல் மூலம் பெற வழியேற்படுத்தி கொடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
20 minute ago
1 hours ago