2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அனுமதிச் சீட்டுகள் இன்று முதல் இணையங்களில்

Editorial   / 2019 ஜனவரி 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வனங்கள், பூங்காக்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இணையத்தளங்கள் ஊடாக அனுமதிச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்க வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த முறையூடாக உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் தேசிய வனங்களைப் பார்வையிடுவதற்காக, அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இந்த முறையை உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த இலகு முறையின் கீழ் முதலாவதாக வில்பத் தேசிய பூங்காவுக்கான அனுமதிச்சீட்டுக்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், பின்னர் இந்த முறை ஏனைய இடங்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .